“நெல்லை கண்ணனின் கைதில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை''
“எச்.ராஜா மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்''
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றிய அவரது பேச்சின் ஆழம் பார்த்தே நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
இதற்கு முன்பு எச்.ராஜா எஸ்.வி.சேகர் போன்ற வர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோது கைது செய்யப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அவர்களின் பேச்சு பொது வாக இருந்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்று கூறினார். |
கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என்று எச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியில் இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அது நான்கு சுவற்றுக்குள் நடை பெற்ற நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாகவும் எனவே அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இந்த விவகாரத்தை சிலர் கையில் எடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய ஜெயக்குமார் பாமக அதிமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.