சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்து உள்ள நெறிமுறைகளை கடைபிடித்து விழா நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலில் உரிய சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீவிர சோதனை அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 18 நெடுஞ்சாலை போலீஸ் ரோந்தும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்து படையும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்...